விமான சேவையில் பாதிப்பு - சென்னையில் நடந்தது என்ன?
flight service affected in chennai for fog
தைத்திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. அதன் படி தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை காலை முதலே கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து புதியனவற்றை வரவேற்று வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள், தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். மேலும், சிறுவர்களும் மேளம் அடித்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் புகைமூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் சென்னையில் இறங்க வேண்டிய சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
தற்போது பதினாறு உள்நாட்டு விமான சேவைகள், எட்டு வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புகைமூட்டம் சீரான பிறகு விமான சேவைகள் சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
flight service affected in chennai for fog