சோகம்... கார் - லாரி நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதன் படி இந்தக் கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இந்த லாரியும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples died in chithambaram due to accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->