அதிகாலையில் சோகம் - திருக்கோவிலூர் அருகே கார் கவிழ்ந்து 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்​கோ​விலூர் அருகே காரின் டயர் வெடித்து பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தில் 5 பேர் உயி​ரிழந்​த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள அரகண்​டநல்​லூர் அடுத்த தேவனூர் கூட்​ரோடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாதவன். ஆயுதப்​படைக் காவலரான இவருடைய மனைவி மேனகா, அதே பகு​தி​யைச் சேர்ந்த தனலட்​சுமி, ராகவேந்​திரன், சங்​கீதா, ஒரு வயது குழந்தை கவுசி​கா, சுபா, சாந்தி, பூமாரி கிராமத்​தைச் சேர்ந்த சரிதா, அவரது சகோ​தரர் மோகன் உள்ளிட்டோர் நேற்று காரில் திரு​வண்​ணா​மலை கோயிலுக்கு சென்று கொண்​டிருந்​தனர்.

அதன் படி கார் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் திருக்​கோ​விலூர் அடுத்த அத்​திப்​பாக்​கம் அருகே சென்று கொண்டிருந்த ​போது, திடீரென காரின் முன்​பக்க டயர் வெடித்​தது. இதனால், ஓட்டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்​தில் ஐந்து பேர் சம்பவ இடத்​திலேயே பரிதாபமாக 
உயி​ரிழந்​தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்​களை மீட்​டு, சிகிச்சைக்காக திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து மணலூர்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples died for car accident in thirukovilur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->