இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 5 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 5 பேர் கைது.!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அடுத்த புவனகிரி தில்லைநகரை சேர்ந்தவர்கள் மகேஷ்-அனுராதா தம்பதியினர். கடந்த பதினொறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. 

இதனால், மகேஷ் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகேஷ் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அனுராதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அனுராதா தனக்கு திருமணத்தின் போது வழங்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை திருப்பி தருமாறு மகேசிடம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மகேஷ் உள்ளிட்ட 5 பேரும் அனுராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதையடுத்து அனுராதா சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் மகேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for harassment to woman in chithambaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->