விருதுநகர்! தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவருக்கு சொந்தமான கோகிலா எண்ணெய் தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென்று ஆலையில் தீ பிடித்துள்ளது.

தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அலையில் இருந்த இயந்திரங்கள், எண்ணெய் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

மேலும் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire at an oil production company in virudhunagar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->