தூத்துக்குடி அரசு தொடக்க பள்ளியில் திடீர் தீ விபத்து!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளி துவங்கி செயல்பட்டு வந்த நிலையில் மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இருப்பினும் பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ஏராளமான பள்ளி சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்கூல் பேக் தீயில் கருகி நாசமாகியது. தீ விபத்து குறித்து ஆசிரியர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in Govt Primary School in thoothukudi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->