விவகாரத்துக்கு மனைவியின் ஈகோ பிரச்னையே காரணம் - பெண் நீதிபதி வேதனை!! - Seithipunal
Seithipunal


கணவரை விட மனைவி வேலைக்கு சென்று அதிகளவு சம்பளம் பெறுவதால் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து உள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி வேதனை!!

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதில் 441 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.9 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. இநத முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது. கணவர்களை விட மனைவிகள் வேலைக்கு சென்று அதிகளவு சம்பளம் பெறுவதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் ஈகோ பார்ப்பதால் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வருகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

female district judge agony Ego problem due to wife high salary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->