தேர்வில் ஜெய்ஸ்ரீராம், கோஹ்லி அட இவர் பெயரையும் விட்டுவைக்கலையே...  - Seithipunal
Seithipunal


விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டிருக்காக விடைத்தாளை கோரியபோது,  அதில்  மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் மற்றும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பெயர்களை விடைத்தாளில் எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள  ஜான்பூர் நகரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல்  என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பயின்றவர் முன்னாள் மாணவர் திவ்யான்ஷு சிங். இவர் சென்ற வருடம் ஆகஸ்டு 3-ந்தேதி ஆர்டிஐ  மூலம் தான் எழுதிய பார்மசி முதல் ஆண்டு படிப்பிற்கான 18 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தார். 

அப்போது விடைத்தாளில், சில முறைகேடுகள் நடந்திருந்தது தெரிய வந்தது. அதாவது, பேராசிரியர்கள் இருவர்,  தேர்வு எழுதிய மாணவர்களிடம் கையூட்டு பெற்று கொண்டு தேர்வில் அவர்களை பாஸ் செய்ய வைத்துள்ளனர்.

இதுகுறித்து பிரமாண பத்திரத்துடன் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரை உத்தர பிரதேச ஆளுநருக்கும் இணைத்து அனுப்பியுள்ளார்.  விசாரணையில், தேர்வு எழுதுவதில் முறைகேடுகள் நடந்தது மற்றும் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களில் ஜெய் ஸ்ரீராம் மற்றும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய பெயர்களை எழுதியுள்ளதும் தெரிய வந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student wrote jaishrram, virat name in exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->