நகைளை ஏமாற்றி விட்டார்கள்.. வீடியோ வெளியிட்டு விட்டு நகைமதிப்பீட்டாளர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் .இவருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். மேரியிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த சாந்தி,சுபா என்ற இருவர் நகைகளை கடனாக வாங்கியுள்ளனர். பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் தரமறுத்துள்ளனர்.

ஆதாரமின்றி அவர்கள் பணம் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் சுபா மற்றும் சாந்திக்கு சாதகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் ஏமாற்றியதால் மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father Commited Suicide In Selam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->