திருநெல்வேலி.! விஷம் குடித்து விவசாயி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(60). விவசாயி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டதால் முத்துக்கிருஷ்ணன் மனவேதனையில் இருந்துள்ளார்.

இதனால் முத்துக்கு தற்கொலை செய்வதற்காக முத்துகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முத்துகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து களக்காடு காவல்துறையினர் க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer suicide in Tirunelveli


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->