மதுரை அருகே சோகம்.! மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஆலங்கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பூச்சிப்பாண்டி (55). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று வயலுக்கு வேலைக்குச் சென்ற பூச்சிப்பாண்டி வழக்கம்போல் மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பூச்சுப்பாண்டியை தேடி வயலுக்குச் சென்றுள்ளனர்.

அப்பொழுது பூச்சிப்பாண்டி மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி கிடந்துள்ளார். இதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பூச்சிப்பாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோழவந்தான் போலீசார், அவரது உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பூச்சிப்பாண்டி, மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by electrocution in madurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->