இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் இடி தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி(67). இவர் நேற்று மாலை வயலில் இருந்த மாடுகளை ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார்.

அப்பொழுது வயலில் இருந்து மாடுகளை ஓட்டி வந்தபோது இடி மின்னலுடன் மழை பெய்ததால், இடிதாக்கி பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கஞ்சனூர் காவல்துறையினர், உயிரிழந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer dies due to lightning strike in Villupuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->