குறி சொல்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போலி சாமியார் மற்றும் உடந்தையாக இருந்த தாய் கைது.!
Fake preacher sexually harassed girl mother who was accomplice arrested in Sivagangai
சிவகங்கை மாவட்டத்தில் குறி சொல்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் மற்றும் உடந்தையாக இருந்து தாயை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் வேட்டங்குட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் மானகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து குறி சொல்லும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக குறி கேட்பதற்காக ராமகிருஷ்ணன் சாமியாரிடம் வந்துள்ளார்.
அப்பொழுது அந்தப் பெண் கணவருக்கு சரியான வேலை அமையவில்லை எனக் கூறி குறி பார்த்துள்ளார். அதற்கு சாமியார் 8 வயது மகளுக்கு அம்மாவாசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் தனது பத்து வயது மகனையும் எட்டு வயது மகளையும் சாமியாரிடம் அழைத்து வந்துள்ளார். அப்பொழுது சாமியார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் ராதாகிருஷ்ணனையும், சிறுமியின் தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fake preacher sexually harassed girl mother who was accomplice arrested in Sivagangai