சட்டப்படிப்பு கல்லூரிகளில் விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

சீர்மிகு சட்டக் கல்லூரி, 14 அரசு கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகியவற்றில் 1,761 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கியது. சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பப் பதிவிற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extension of time to apply in Law Colleges


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->