#BREAKING | ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என்ன ஆனது?! மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில்..!
EVKSElangovan health report 26032023
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரம் அவருக்கு XBB வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அதிலிருந்து அவர் குணமடைந்தார்.
இதற்கிடையே, சிலர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கவலைக்கிமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பி வந்தனர்.
அவரின் ஆதரவாளர்கள்,புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவர் நலமுடன் உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் வீடியோ வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர் எதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
EVKSElangovan health report 26032023