பராமரிப்பு பணி! ஈரோடு முதல் கோவை வரை ரயில் சேவை ரத்து.! - Seithipunal
Seithipunal


ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ஈரோடு முதல் கோவை வரையிலான ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும், 14ல் சோமனூர் - வாஞ்சிபாளையத்தில், பாலம் கட்டுமானப்பணி நடைபெற இருப்பதால், மார்ச், 12ஆம் தேதி புறப்பட்டு, 14ஆம் தேதி கோவை வந்து சேர வேண்டிய லோகமான்ய திலக் - கோவை விரைவு ரயில், ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறுமார்க்கத்தில், 14ஆம் தேதி புறப்படும் கோவை -லோகமான்ய திலக் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து புறப்படும் என்றும், ஈரோடு முதல் கோவை வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Kovai Train service cancel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->