அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கூடாது - அடுக்கடுக்கான காரணங்களை தெரிவித்த அமலாக்கத்துறை!  - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் பிறப்பித்து, முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்டை  நிராகரிக்க வேண்டும் எனவும், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக சார்பில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கிய நிலையில், "அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை சோதனை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தும் கைது செய்தது ஏன்?

கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவில்லை. கைதுக்கான காரணங்களை செந்தில் பாலாஜியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ தெரிவிக்கவில்லை.

செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன" என்று திமுக தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார்.

இத்னை தொடர்ந்து  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அமலாக்கத்துறை பல்வேறு காரணங்களை முன்வைத்து வாதம் செய்து வருகிறது.

அதில் குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்க தயார் என்று அமலாக்கத்துறை வாதம் செய்துள்ளது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது...
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Directorate SenthilBalaji Arrest EDRaid Chennai HC


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->