பரபரப்புக்கு முற்றுப்புள்ளி! செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடக்கவில்லை...! - IT துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
end excitement No raid conducted at Selva Perundakai house IT Department official announcement
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தல் களத்தில் உள்ளார்.இந்த சூழலில், மணிமங்கலம் மற்றும் கீழ்பாக்கம் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து, “சோதனை என்ற பெயரில் என்னை சட்டவிரோதமாக முடக்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வந்துள்ள நேரத்தில், தன்னை தனது அரசியல் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
“மத்திய அமைப்புகள் அரசியல் அழுத்தத்தின் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன என்பது கவலைக்கிடம்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்துக்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், வருமான வரித்துறை தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், செல்வப்பெருந்தகை கூறியதுபோல் எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை என்றும், அவரை பிரசாரத்திற்கு செல்ல தடுத்ததாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் அரசியல் குற்றச்சாட்டு மறுப்பு என இரு தரப்பினரிடையே தீவிர சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
end excitement No raid conducted at Selva Perundakai house IT Department official announcement