கடவுளே காப்பாற்று.! கதறும் கார் ஓட்டுநர்.. அதிகாலையில் நடந்த ஆக்ரோஷ சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


ரோடு மாவட்டதின்  சத்தியமங்கலத்தில் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்த காட்டு யானை, காரில் உள்ள முகப்புக்கண்ணாடியை சிதறடித்து. 

தாளவாடியில் இருந்து கோவைக்கு 5க்கும் மேற்பட்டோர் அதிகாலை நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது ஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்த காரை, குட்டியுடன் நின்று கொண்டிருந்த காட்டு யானை ஒன்று வழிமறித்தது. 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஓட்டுநர் அதிரிச்சி அடைந்து காரை பின்னோக்கி இயக்கியுள்ளார். இருப்பினும் அந்த யானை, விடாமல் துரத்தி, காரின் முகப்புக்கண்ணாடியை உடைத்தது. மேலும், அதன் அருகிலேயே ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தது. 

இதனால், காரில் அமர்ந்திருந்தவர் கடவுளே காப்பாற்று என்று கதற, சக வாகன ஓட்டிகள் யானையை அங்கிருந்து விரட்டியடித்து, அவர்களை பத்திரமாக மீட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elephant attack car


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->