மின் கம்பத்தில் ஏறி வயரை சரிசெய்த எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


மின் வயரை சரிசெய்ய சென்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்இன் , சூரியமணிக்கன் கிராமத்தில் ஞான சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின் மோட்டார் ஓடவில்லை  என தெரிகிறது. இதனால், மோட்டாரை பழுது நீக்க செல்லத்துரை என்பவர் வந்துள்ளார்.

 மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல்  தெரிவிக்காமல் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு மின்வயரை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து  பரிதாமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician death Near Thothukudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->