தஞ்சாவூர் அருகே பரிதாபம்.! பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மாற்றியில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோவிந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் மலர்மன்னன்(30). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அருமலை பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறி மலர்மன்னன் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மலர்மன்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மலர் மன்னனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrical worker dies due to electrocution in Thanjavur near


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->