குடியாத்தம் அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் அருகே ரயில் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தென்னங்குப்பம் விளையாடபுரம் பகுதியில் சேர்ந்தவர் சொக்கலிங்கம்(வயது 70).

இவர் குடியாத்தம்-காவனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elderly man killed in train collision gudiyattam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->