பிள்ளைகளைத் தவிக்க விட்டுப் போன தாய்...! - குப்பை கொட்டச் சென்ற இடத்தில் கள்ளக்காதலனுடன் எஸ்கேப்...!
mother who left her children suffer Escape thief garbage dump
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய குடும்ப சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. பாகலகுண்டே பகுதியில் வசித்து வரும் சரத்குமார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி பிரியாவுடன் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
கிரிநகரில் வசித்த காலத்தில், அருகில் சலூன் நடத்தி வந்த பிரபுவுடன் பிரியாவுக்கு ஏற்பட்ட பழக்கம், பின்னர் மறைமுக உறவாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவரம் கணவருக்கு தெரிந்ததும் குடும்பத்தில் கடும் பிணக்கம் உருவானது. உறவினர்களின் தலையீட்டில் சமரசம் செய்யப்பட்ட பின்னர், அவர்கள் இடம் மாற்றி பாகலகுண்டேவில் குடியேறினர்.ஆனால் பழைய தொடர்பை துண்டிக்காமல் தொடர்ந்து வந்த பிரியா, ஒருநாள் குப்பை போடச் செல்கிறேன் என கூறி வெளியேறி மீண்டும் வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலை மனைவி காணாமல் போனதை உணர்ந்த சரத்குமார் அதிர்ச்சியடைந்தார்.மேலும் விசாரணையில், குழந்தைகளுக்கு உணவில் தூக்கமருந்து கலந்து கொடுத்து விட்டு, காதலனுடன் பிரியா வெளியேறியிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும், குப்பை பையுடன் மற்றொரு பையை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இதுகுறித்து சரத்குமார் அளித்த புகாரின் பேரில், பாகலகுண்டே காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, பிரியா மற்றும் பிரபுவை தேடி வருகின்றனர்.
தாயின் பிரிவால் இரண்டு சிறுவர் குழந்தைகள் துயரத்தில் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mother who left her children suffer Escape thief garbage dump