#தென்காசி || விஷம் குடித்து முதியவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானுர் அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் சேர்மக்கனி. இவர் நீண்ட நாளாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இருப்பினும் நீரிழிவு நோயினால் மிகுந்த பாதிப்படைந்த சேர்மக்கனி மனவேதனையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி உள்ளார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் முதியவர் சேர்மக்கனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elderly man commits suicide by drinking poison in thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->