டி.டி.வி தினகரனை திக்குமுக்காட செய்யும் திட்டம்..? பார்முலாவை மாற்றி போட்டு உடன் பிறப்புகளை படபட வைக்கும் வியூகம்.!
இனி அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டு நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை வகுத்துள்ளது.
இவ்வளவு காலம் தினகரன் தரப்பின் செயல்பாடுகளை பொறுமையாக கவனித்து வந்த முதல்வர் தரப்பு இனி அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டு நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை வகுத்துள்ளது.
விரைவில் இடைதேர்தல் அறிவிப்பு வெளியாக கூடும் என்பதால் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு வியூகங்களையும் அமைத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா இருந்த காலத்தில் எப்படியோ, அதனை போலவே பதினெட்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்தித்து, சமகால அரசியல் களத்தில் தானே நம்பர்ஒன் என்ற இடத்துக்கு வர துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு மாபெரும் வெற்றியை கொடுப்பதன் மூலமாக தேசிய கட்சிகளுக்கு சில பாடம் புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சமீப காலமாக பாஜகவின் செயல்பாடு அதிமுகவை புறக்கணிக்கும் நோக்குடனே இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதால், முதல்வர் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இடைதேர்தல் நடந்து முடிந்த பிறகு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிகழும் வேளையில் அதிரடியான நடவடிக்கைகள் மூலம் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் நுணுக்கத்தை எப்படியோ அறிந்து விட்டார்.
அதற்கு முதல் கட்டமாக எதிரணியினரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாவே தினகரன் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை அமைந்துள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவின் பொழுது தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படும் நிலையில், இனி அ.தி.மு.கவின் அடிப்படைத் தொண்டர்களை தினகரன் பக்கம் செல்லாமல் தடுக்கும் வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி தொடர்ச்சியாக தினகரன் தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார் என்கின்றனர் அக்கட்சியினர்.
English Summary
edappadi-palanisamys-strategy-for-18-constituency-election