கொரோனா தடுப்பு நிதி தொடர்பாக, பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ள முதல்வர்..!!
Edappadi palanisamy request modi for corona special fund
இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் பூரண நலன் பெற்று 41 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 519 இந்தியர்களுக்கும், 43 வெளிநாட்டினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரும் 21 நாட்களுக்கு கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று மாலை 6 மணிமுதலாகவே தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் நேற்று நிறுத்தப்பட்டது.
தமிழக அரசு ஏற்கனவே மக்களுக்கு நிதியுதவி அறிவித்து, ரூ.500 கோடி கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுங்கியிருந்த நிலையில், பிரதமருக்கு தமிழக முதல்வர் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா பாதிப்பு நடவடிக்கைக்கு ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்ய கூறி கோரிக்கை வைத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கொரோன தடுப்பு நடவடிக்கை சிறப்பு நிதி குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Edappadi palanisamy request modi for corona special fund