தமிழ்நாட்டில் வாக்குபதிவு நேரம் என்ன? ECI அதிகாரபூர்வமாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாகவும் 5 மாநில பொது தேர்தல்கள் 2 கட்டங்களாகவும் மற்றும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு அன்று காலை 7ல் இருந்து மாலை 6 மணி வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பான அரசாணையை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI announced polling timing in tamilnadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->