பம்பரம் கிடைக்காவிட்டால்... வேற பிளான் இருக்கு.! - துரை வைகோ.!
Durai Vaiko speech
திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
தேர்தல் ஆணையம் சின்னம் விவகாரத்தில் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறது. பா.ஜ.கவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது.
ஆனால் மற்ற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைக்கவில்லை.

அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த சின்னத்துக்கு என தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதேபோல் எங்களுக்கு பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது.
நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டாலும் மாற்று திட்டங்களை வைத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தை மதித்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளோம்.
சின்ன மாற்றப்பட்டது தொடர்பாக இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம். புதிய சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்த்து நாங்கள் வெற்றி அடைவோம். பம்பரம் சின்னத்தை மாற்றப்படுவதால் எங்களுக்கு எந்த ஒரு பின்னடையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.