புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி பெறுமதியான 4.82 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்; நான்கு பேர் கைது..!
Drug pills worth Rs 9 crores which were about to be smuggled from Pudukkottai to Sri Lanka were seized and four people were arrested
புதுக்கோட்டையில் இருந்து 4.82 லட்சம் போதை மாத்திரைகளை கடத்த இருந்த நன்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகர டிஎஸ்பி இரா.பிருந்தா தலைமையிலான போலீஸார், டிவிஎஸ் கார்னர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 04 பேர் அட்டைப் பெட்டிகளுடன் சாலையோரத்தில் நின்றிருந்துள்ளனர்.
அவர்களிடம் ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததும், வாகனம் ஒன்றுக்காக காத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
சுமார் 4.82 லட்சம் போதை மாத்திரைகளை கடத்தி செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் (33), அமல்ராஜ் (37), பிரதாப் (35), சந்தியா (36) ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 07 பெட்டிகளில் இருந்து, ரூ.9 கோடி மதிப்பிலான 4.82 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த மாத்திரைகளில் உற்பத்தி செய்யப்பட்ட இடம் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை என்றும், இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Drug pills worth Rs 9 crores which were about to be smuggled from Pudukkottai to Sri Lanka were seized and four people were arrested