புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி பெறுமதியான 4.82 லட்​சம் போதை மாத்திரைகள் பறிமுதல்; நான்கு பேர் கைது..! - Seithipunal
Seithipunal


புதுக்​கோட்டையில் இருந்து 4.82 லட்​சம் போதை மாத்திரைகளை கடத்த இருந்த நன்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்​கோட்டை நகர டிஎஸ்பி இரா.பிருந்தா தலை​மையி​லான போலீ​ஸார், டிவிஎஸ் கார்​னர் பகு​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​னர். அப்போது சந்​தேகத்​துக்கு இடமான வகை​யில் 04 பேர் அட்​டைப் பெட்​டிகளு​டன் சாலை​யோரத்​தில் நின்​றிருந்​துள்ளனர்.

அவர்​களிடம் ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்​தியபோது, அவர்​கள் போதை மாத்​திரைகளை இலங்​கைக்கு கடத்த இருந்​ததும், வாக​னம் ஒன்​றுக்​காக காத்​திருந்​ததும் தெரிய ​வந்​துள்ளது.

சுமார் 4.82 லட்​சம் போதை மாத்திரைகளை கடத்தி செல்ல இருந்த ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன் பகு​தி​யைச் சேர்ந்த ஆம்​ஸ்ட்​ராங் ​(33), அமல்​ராஜ் (37), பிர​தாப்​ (35), சந்​தி​யா (36) ஆகியோரைப் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 07 பெட்டிகளில் இருந்து, ரூ.9 கோடி மதிப்​பிலான 4.82 லட்​சம் போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்டுள்ளன.

ஆனால், இந்த மாத்​திரைகளில் உற்​பத்தி செய்​யப்​பட்ட இடம் குறித்த விவரங்​கள் எதுவும் இல்லை என்றும், இது தொடர்பாக அவர்களிடம் வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug pills worth Rs 9 crores which were about to be smuggled from Pudukkottai to Sri Lanka were seized and four people were arrested


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->