ராமேஸ்வரத்தில் பறந்த மர்ம ட்ரோன் - அச்சத்தில் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கடல் அட்டை, பீடி இலை, மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றன. அதேபோல் இலங்கையில் இருந்தும் கடத்தல்காரர்கள் மூலம் தமிழகத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்தி கொண்டுவரப்படுகின்றன.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மர்ம டிரோன் ஒன்று பறந்து சென்றதாக கடற்படையின் ரேடாரில் பதிவாகியுள்ளது. இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் ராமேசுவரத்தில் உள்ள மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் பறந்து சென்ற டிரோன் எந்த பகுதியில் இருந்து வந்தது? யார் மூலம் பறக்க விடப்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் சுற்றுலாத்துறை குறித்த தகவலுக்காக டிரோன் கேமரா பறக்க விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் உளவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drone fly in rameshwaram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->