மூன்று திருமணம் செய்த நிலையில் பள்ளி மாணவியை கடத்திய ஓட்டுநர்..! - Seithipunal
Seithipunal


மூன்று முறை திருமணமான நிலையில்,‌ பள்ளி வாகன ஓட்டுனர் 11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதியன்று அந்தப் வாகன ஓட்டுநர் அஜித் என்பவர் மாணவியை கடத்தி சென்றுள்ளார். பள்ளிக்கு சென்று மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை அக்கம்பக்கதில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவி கடத்த துணையாக இருந்த கார்த்திக் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை அடுத்து, சேலம் ஏற்காடு ஓசூர் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில் பெங்களூரில் அவரை கைது செய்தனர் அதன் பின்னர் அவரிடம் இருந்த மாணவியை மீட்டனர். சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமானது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver arrested who kidnapping girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->