திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகள் ஜாமீன் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்எல்ஏவான கருணாநிதியின் மகன் ஆண் டோ மதிவாணன் இவரது மனைவி மெர்லினா ஆகியோர் அவர்களது வீட்டில் பணியாற்றிய சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. 

இதனால் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தம்பதி தலைமறைவாக்கினர். இதனால் போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கைது செய்யப்பட்ட பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA son daughter in law bail petition 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->