திமுக பிரமுகரின் நில தகராறு! சண்டையில் மண்டை உடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி!
DMK member viral video from mailaduturai
திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணவரின் அடாவடி செயல்!
மயிலாடுதுறை மாவட்டம் அருகே சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அன்புமணி. இவர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறனின் மனைவி ஆவார். மணிமாறனும் அவரது மகனும் இணைந்து இவர்களது வீட்டின் அருகே வசித்து வரும் பிரகலாதன் என்பவரின் அனுபவத்தில் இருக்கும் இடத்தை கேட்டு தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மணிமாறனும் அவரது மகன்களும் சேர்ந்து பிரகலாதனை அனுப்பித்து வரும் இடத்தை சுற்றி இருந்த வேலிக்கு தீ வைத்து எரித்துள்ளனர். அதை தட்டிக் கேட்கச் சென்ற பகலநாதனுக்கும் மணிமாறன் மற்றும் அவரது தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது மணிமாறன் தரப்பினர் கட்டையால் பிரகலாதனை ஓட ஓட விரட்டி அளித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பிரகலாதனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிமாறன் வேலிக்கு தீ வைத்து பிறகு பிரகலாதனை துரத்தி அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
DMK member viral video from mailaduturai