ரூ.16 இலட்சம் மோசடி வழக்கில் தேமுதிக வட்டசெயலாளர் கைது.. வட்டத்தை செவ்வகத்தில் அடைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மடிப்பாக்கம் கக்கன் நகர் பகுதியை சார்ந்தவர் மேனகா (வயது 28). இதே பகுதியை சார்ந்தவர் சரத் குமார் (வயது 28). இவர் தேமுதிக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். 

சரத்குமார் மேனகாவிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய மேனகாவும் முதற்கட்டமாக ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்த நிலையில், அந்த பணத்திற்கு தங்க காசுகளை மேனகாவிடம் வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்தியுளளார். 

இதன்பின்னர், சென்னை விமான நிலையத்தில் தனக்கு பழக்கம் இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை குறைந்த விலையில் வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய மேனகா பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ரூ.16 இலட்சம் வரை வாங்கி கொடுத்துள்ளார். 

பணத்தை பெற்றுக்கொண்ட தேமுதிக வட்ட செயலாளர் சரத் குமார், நகையை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கடந்த 2019 ஆம் வருடத்தில் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், கடந்த 2 வருடமாக வழக்கை கிடப்பில் போட்ட நிலையில், பரங்கிமலை துணை கமிஷ்னரிடம் மேனகா புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில், விசாரணை செய்த காவல் துறையினர் தேமுதிக வட்ட செயலாளர் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK Supporter Arrest Cheating Case Chennai Madipakkam


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->