தலைமையின் இறுதி முடிவிற்கு முழு ஒத்துழைப்பு - தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதி.!
DMDK Premalatha Vijayakanth Meeting Chennai Koyembedu Head Office 30 Jan 2021
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (30.01.2021) நடைபெற்றது.

இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்வரும் 2021 சட்டமன்றம் பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆலோசனை தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவரும், தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாகவும், விஜயகாந்த் எடுக்கும் இறுதி முடிவுக்காக தற்போது காத்திருப்பதாகவும், அறிவிப்பு வந்ததும் தேர்தல் களப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
DMDK Premalatha Vijayakanth Meeting Chennai Koyembedu Head Office 30 Jan 2021