மதுபோதையில் தகராறு.. வாலிபருக்கு கத்திகுத்து.. திண்டுக்கல்லில் பயங்கரம்.!!
Dindigul youngster murder attempt due to fight
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த இளைஞர், மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் கத்தியால் குத்தப்பட்டு சாலையோரத்தில் வீசி சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு பகுதியில் பலத்த காயத்துடன் வாலிபர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
இவரை மீட்ட காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்த விசாரணையில், கொடைரோடு பகுதியை சார்ந்த செண்பகராஜா, அங்குள்ள மதுபான கடையில் மதுபானம் அருந்த சென்றுள்ளார். இந்த சமயத்தில், அங்குள்ள கிளப் உரிமையாளர் ராம்குமார் மற்றும் செந்தில் குமாருடன் ஏற்பட்ட தகராறில் செண்பகராஜாவிற்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
இதனையடுத்து இந்த விஷயம் குறித்த புகாரின் அடிப்படையில் ராம்குமார் மற்றும் செந்தில்குமாரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul youngster murder attempt due to fight