போதையில் தாயுடன் தகராறு.. அரங்கேறிய கொடூர கொலை.. மகனின் வெறிச்செயல்.!
Dindigul man Murder Mother Police Investigation 6 Jan 2021
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியார்சத்திரம் தோப்புபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 71). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், இவரது மகன் ரத்தினவேலு. ரத்தினவேலுவிற்கும் முத்தம்மாளுக்கும் இடையே பல வருடங்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
இதனால் இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல், தாயின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ரத்தினவேலு தாயை கீழே தள்ளியுள்ளார்.
கீழே விழுந்த முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இரத்தின வேலுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul man Murder Mother Police Investigation 6 Jan 2021