2010 காவல் நிலையத்தில் மர்மமாக கைதி உயிரிழந்த விவகாரம் - திண்டுக்கல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
Dindigul District Court Judgement to Police Officers 3 Person Jail 2010 Murder Case 27 April 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி காவல் நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விஷயம் கடந்த 2010 ஆம் வருடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு கடந்த 11 வருடமாக விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், கைதி மர்ம மரணம் அடைந்த வழக்கில் காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் 2 தலைமை காவலர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 10 வருட சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul District Court Judgement to Police Officers 3 Person Jail 2010 Murder Case 27 April 2021