கல்லூரிக்கு பணம் கெட்டனும்.. இரண்டு நாட்கள் தவணை கேட்ட தாய்.. மகள் எடுத்த விபரீத முடிவு.!
Dindigul College girl Gayathri Suicide due to College Fees Late
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அளவாசிப்பட்டி பகுதியை சார்ந்தவர் கனகராஜ். இவரது மகள் காயத்ரி (வயது 18). இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், காயத்ரி கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று தாயிடம் தெரிவித்துள்ளார். கல்வி கட்டணத்தை செலுத்த இரண்டு நாட்களில் பணம் கொடுப்பதாக தாய் தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த காயத்ரி தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் காயத்ரி தனது தோட்டத்தின் கிணற்றுக்கு சென்று, கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தோட்ட தொழிலாளர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், காயத்ரியை பிணமாக மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக திண்டுக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul College girl Gayathri Suicide due to College Fees Late