6500 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம்  சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக, நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக வந்தது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.

 இதனால் மாலையில் திடீரென நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்து வந்தது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

இதன் காரணமாக ஐந்தருவி,மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இதில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து,  மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri Hogenakkal water flow reduced to 6500 cubic feet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->