ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில், இன்று ஆடி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

இதேபோல், ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில் வளாகம், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 7-ம் நாளான இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotees croud increase in rameshwaram temple


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->