பருவதமலையில் தவறி விழுந்து பக்தர் பலி.!!
devotee died in paruvathamalai
"தென் கைலாயம்" என்று அழைக்கப்படும் பருவதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் இந்த மலை மீது எரிச் சென்று பக்தர்களே மலை மீது உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் திரளான பக்தர்கள் இங்கு மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமம் செல்லப்ப நகரை சேர்ந்தவர் பழனிவேல் என்பவர் நண்பர்களுடன் பருவதமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

அங்கு அவர் மலை ஏறிக் கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்களும் மலை மீது ஏறிக்கொண்டிருந்த பக்தர்களும் கத்திக் கூச்சலிட்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அதன் படி விரைந்து வந்த போலீசார் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பழனிவேல் உடலை மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் பழனிவேலை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் இறந்த பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
devotee died in paruvathamalai