தென்காசியில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்: கைது செய்யப்பட்ட வாலிபர்கள் கூறிய பகீர் தகவல்: மானாமதுரை போலீசார் அதிர்ச்சி..!
Dangerous weapons stashed in Tenkasi were seized and 04 youths were arrested in Manamadurai
தென்காசியில் பயங்கர ஆயுதங்ககளை பதுக்கி வைத்திருந்த குற்றத்தில் 04 வாலிபர்கள் போலீசாரால் கைதி செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திரிவதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மானாமதுரை அருகே கிருங்காகோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாளுடன் நின்றிருந்த ராஜகம்பீரத்தை சேர்ந்த 19 வயது முகமது பாரிஸ், 18 வயதுடைய தினேஷ் , சிவகங்கை மேலவாணியங்குடியை சேர்ந்த 19 வயது பாலமுருகன் ஆகியோரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், முகமது பாரிஸ் என்பவன் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறதாக கூறப்படுகிறது. இந்தசம்பவம் தொடர்பாக ராஜகம்பீரத்தை சேர்ந்த 19 வயதுடைய ஆகாஷ் என்பவனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். தென்காசியில் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக தெரிவித்துள்ளான்.
இதையடுத்து, தென்காசிக்கு விரைந்த தனிப்படையினர், அங்கு, குற்றாலம், வாவா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவரை கைது செய்துள்ளனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீச்சரிவாள், வாள்கள், பட்டா கத்திகள் என 26 ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக பகீர் தகவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட தனிப்படையினருக்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஜ் ராவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
English Summary
Dangerous weapons stashed in Tenkasi were seized and 04 youths were arrested in Manamadurai