மத்திய அரசு அதிரடி!!! சமையல் கியாஸ் சிலிண்டர் விலை திடீரென ரூ.60 உயர்வு...! - மக்கள் அதிர்ச்சி - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் தாக்கத்தின் காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் மத்திய அரசு வழிகாட்டியுள்ள விதிமுறைகளில் தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, வழக்கப்படி மாதத்தின் முதல் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் திருத்தம் செய்யும் நடைமுறை உள்ளதாகும். ஆனால் இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி, நள்ளிரவில் விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, தலைநகர் டெல்லியில் 835 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 913 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.928.50க்கு விற்பனை செய்யப்படும்.

இந்த விலை உயர்வு இன்றும் தினசரி விற்பனைக்கு அமலாகி உள்ளது.மத்திய அரசு தெரிவிக்கையில், ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது, அதேசமயம் விலையை உயர்த்தும் முடிவு நள்ளிரவில் எடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்நிலை தற்போது மாற்றப்பட்டு, மக்கள் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government Cooking gas cylinder price suddenly increased by 60 People shocked


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->