கடலூர் அருகே நடந்த கொடூர விபத்து! இரு லாரிகளுக்கு இடையே சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய கார்! - Seithipunal
Seithipunal


வேப்பூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது மணல் லாரி மோதிய கொடூர விபத்து பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த கார் மீது, மணல் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்கள், அய்யனார் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.

அப்போது தெலுங்கானா பதிவெண் கொண்ட மணல் லாரி ஒன்று, நின்று கொண்டிருந்த கார் மீது மோதியதில், இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி அப்பளம் போல் நசுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த நங்கநல்லூரை சேர்ந்த விஜய் வீரராகவன் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயராகவன், அவரின் மனைவி, தாய் வசந்தலட்சுமி, 12 மற்றும் எட்டு வயது மகன்கள் என ஐந்து பேர் உயிரிழந்த இந்த கொடூர விபத்து சம்பவம், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Veppur Road Accident


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->