வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!
Court orders Minister Duraimurugan to appear in person in disproportionate assets case
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிர்வரும் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர் ரூ.1.40 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்க்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2017-ஆம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குறித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அத்துடன், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இந்த வழக்கை 06 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை மேற்கொண்ட சென்னை சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான சாந்தகுமாரி, பிடிவாரண்ட்டை திரும்ப பெறக்கோரினார். இதனையடுத்து அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை திரும்ப பெற்ற நீதிமன்றம், துரைமுருகனை வரும் 15-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
English Summary
Court orders Minister Duraimurugan to appear in person in disproportionate assets case