தண்ணீரில் மூழ்கிய மணமகள்..காப்பாற்ற சென்ற மணமகனுக்கு நேர்ந்த விபரீதம்.. கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சோகம்..!
Couple Death in Krishanagiri
நீரில் மூழ்கி திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா . இவருக்கு தேன்கனிக்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்ற அபிநயா அங்கிருந்த தடுப்பணையில் குளிக்க சென்றார்.
அப்போது, அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் மூழ்க ஆரம்பித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சிவா அவரை காப்பாற்ற சென்றார். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவ்வம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Couple Death in Krishanagiri