கரோனா வைரஸ்: தமிழகத்தில் 700 ஐ கடந்த பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை...!!
Corona virus tamilnadu latest update 08 april
தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் கரோனா பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நேற்றுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 690 ஆக இருந்தது. மேலும், 7 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. 42 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர்கள் ஆவார்கள்..
அரசு தேவையான அணைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Corona virus tamilnadu latest update 08 april