அடுத்தடுத்து இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அதே சமயத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சார் சஞ்சீவ் பல்யானுக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களும் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, தங்களை தனிமைபடுத்தி கொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CORONA affected two central minister


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->