மதுரை: செல்போன் கோபுரத்தை காணவில்லை... காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..! - Seithipunal
Seithipunal


செல்போன் கோபுரத்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், கூடல்புதூரில் அமராவதி தெருவில் பிரபல நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் செல்போன் டவர்கள் காணமல் போனதாக மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செல்போன் கோபுரம் திருடு போனது உறுதியாது. இதனை அடுத்து, செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் இடையேயான பிரச்சனையால்  செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Complain to the police that the cell phone tower is missing


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->